எப்போதும்
ஒரு பாவனை அவசியமாகிறது
உத்தரவுகளைப் பெற்றுக் கொள்ளும்போதோ
கட்டளைகளை இடும்போதோ
சிக்கலான
ஒரு வாக்குவாதத்துக்குரிய குறிப்புகளை
பின் கையில் மறைத்தபடி தான்
எதிரியை
எதிர்கொள்ள நேர்கிறது மௌனமாய்
நிஜ முகங்களின் தசைகளில்
நின ஒழுகலென
எப்போதும்
வழிந்தபடியே இருக்கிறது
பொய்..****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக