திங்கள், மே 31, 2010

தேவதைகள் விட்டுச் செல்லும் சிறகுகள்..

*
தேவதைக் கதைகளில் வரும்
தேவதைகள்
கதை முடியும் முன்
விட்டுச் செல்கின்றன
தம்
சிறகுகளை..

அதன் வர்ணச் சாயல் பூசிப்
பூக்கும் சொற்கள்
மகரந்தங்களைச் சூழ் கொண்டு

துயரங்கள் நீங்கக் கமழ்கின்றன
நறுமணங்களாய்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக