திங்கள், மே 31, 2010

கை நழுவும் தருணங்களின் இழப்பு..

*
கை நழுவி விலகும் தருணங்களின்
வெப்பம்
தாங்க முடியாத துக்கத்தை
முதுகில் ஏற்றி
நடக்க விடாமல் இருத்துகிறது

பாதையின்
மழை ஈரச் சகதிப் போல

இழப்புகள்
நினைவுகளின் பாதங்களில்
படிந்து விடுகிறது செம்பழுப்பு நிறத்தில்

விசும்பல் ஒலியின் அலை நுணுக்கத்தில்
பதிவாகி சாகிறது
கை நழுவி விலகும்
தருணங்கள்..

****

2 கருத்துகள்:

  1. /கை நழுவி விலகும் தருணங்களின்
    வெப்பம்
    தாங்க முடியாத துக்கத்தை
    முதுகில் ஏற்றி
    நடக்க விடாமல் இருத்துகிறது/

    இதுக்கே 100 மார்க் போடலாம்....

    மொத்தத்தில் அடடே போடவைக்கிறது கவிதை...

    பதிலளிநீக்கு