எழுதிக் கொண்டிருக்கும்போதே
வெளியேற நேர்கிறது
துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை
ஒரு கவிதை
சபித்துவிட முடியாது
இருள் பிரதேசம் வாய்ப்பாகிவிடுகிறது
வசப்பட மறுத்த சொற்களுக்கு
அவை
கால்களைக் கடித்துவிட்டு
மேஜைக்கடியிலோ
கட்டிலுக்கு கீழோ
ஸ்டூலில் கழற்றிப் போட்டிருக்கும்
உள்ளாடைக்குள்ளோ ஒளிந்து கொள்கிறது
நம்பிக்கை அறுந்து
இழை இழையாய்த் தொங்கும்
இந்த இரவின் ஈரத்தில்
எழுதிக் கொண்டிருக்கும்போதே
வெளியேற நேர்வது
வேறொரு வாசலுக்குள்
நுழைவதற்கான இருண்மைப் புள்ளி..!
****
நன்றி : ' உன்னதம் ' மாத இதழ் - ( மே - 2010 )
****
நன்றி : ' உன்னதம் ' மாத இதழ் - ( மே - 2010 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக