திங்கள், மே 31, 2010

யாருமற்ற எதிர் நாற்காலி

*
மது அருந்தும் வேளையில்
மிகு படிமத் தந்திரங்களோடு
சந்தேகமாய்
என்னை அணுகும் கவிதையை
சுலபமாய்த் தவிர்த்துவிடுகிறேன்

யாருமற்ற
எதிர் நாற்காலியோடு
தொடரும் என் உரையாடலுக்கு
தொட்டுக் கொள்ள
ஊறுகாய் தேவையாயிருக்கிறது

எனக்கு அதை
இந்த
உயர்ரக பார் சிப்பந்தியும் தருவதில்லை
தந்திரக் கவிதைகளும் தருவதில்லை

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக