திங்கள், மே 31, 2010

மௌனக் கணம்

*
உதடு பிதுங்க
விழி அகன்று..
நீர் கோர்த்துக் கொண்ட மௌனத்தில்..

கழுத்து 'டை' சுருட்டி..
வாய் பொத்திக் கொள்கிறாள்..

வீட்டுப் பாடம் எழுதாமல்
சற்று முன்
அடி வாங்கி நிற்கும் சிறுமி..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( மே - 3 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=7854&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக