*
உதடு பிதுங்க
விழி அகன்று..
நீர் கோர்த்துக் கொண்ட மௌனத்தில்..
கழுத்து 'டை' சுருட்டி..
வாய் பொத்திக் கொள்கிறாள்..
வீட்டுப் பாடம் எழுதாமல்
சற்று முன்
அடி வாங்கி நிற்கும் சிறுமி..
****
நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( மே - 3 - 2010 )
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=7854&Itemid=139
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக