*
அறையெங்கும் பெருகும்
வெப்ப மூச்சின் ஊற்றுக்கண்ணிலிருந்து
வழிகிறது காத்திருப்பின் பசி
சிறகு கோதி காத்திருக்கும்
மனப்பறவையின் விழிகள்
நினைவின் அடுக்குகளை ஊடுருவித் தவிக்கின்றன
மாம்சம் புசிக்கும் பறவையின்
அலகில்
மிருகத்தின் சுவாசம் வியர்க்கிறது
வேட்டைக்கு நாணிழுக்கும் விரல்கள்
துடிப்போடு குறி வைக்கிறது
கவனத்துக்குள் அகப்பட மறுக்கும்
பொழுதுகளை
****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மே - 2010 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2892
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக