*
மாத்திரைக்குள்ளிருந்து
உடைந்து
வெளியே விழுகிறது
நிறமிழந்த கிருமி
எலும்புகளால் முடையப்பட்ட
உடலுக்குள்
நீண்ட பயணமாகி நீந்துகிறது
உயிர்
ஒரு
வெண் தேவதை
தன் ஸ்டெதாஸ் கரங்கள் கொண்டு
சோதித்துச் சபிக்கிறாள்
சென்றடையும் தூரத்தை
விரல் விட்டு எண்ணத் தொடங்கும்படி
கட்டளையிடுகிறாள்
மரணத்தின் வாசல் வெகு அருகில்
என்கிறாள்
அவள் எழுதித் தரும்
மாத்திரைக்குள்ளிருந்து
உடைந்து
உள்ளேயே விழுகிறது
நிறமிழந்த கிருமி
****
Wonderful!!!!
பதிலளிநீக்குஉங்கள் கவிதைகளில் வார்த்தைகள் மிக நேர்த்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டு கோர்க்கப்படுகிறது.
பதிலளிநீக்குஅது உங்களின் மற்றொரு கவிதையில் சொல்லப்பட்டதுபோல், "சானைப்பிடிக்கப்பட்ட வார்த்தைகள்" போல தோன்றுகிறது.
வார்த்தைகளில் அதிகக்கணமும் கடுமையும் இருப்பதுபோலத் தோன்றுகிறது. அது உங்கள் கவிதைக்கு பலம் சேர்க்கிறது என்றாலும், மென்மையாகவும் சில கவிதைகள் எழுதவேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள் சகோ...
மற்றபடி எப்போதும் போல் உங்கள் கவிதை அருமை...
--
அன்புடன்
கவிநா...
நன்றி..!
பதிலளிநீக்குசக்தி
@ கவிநா
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
மென்மையான கவிதைகளும் எழுதியிருக்கிறேன்...
கொஞ்சம் தேடி பிடிக்க சிரமமாயிருக்கும்.
மன்னிக்கவும்.. :)