வெள்ளி, அக்டோபர் 29, 2010

எந்த வரியில் எழுதினாலும்..

*
பரிமாறிக்கொண்ட பிரியத்தை
கையெழுத்திட்டு தரச் சொல்லி
உள்ளங்கை நீட்டினாள்
ரேகை வரிகள் முழுதும்
வியர்த்திருந்தது

எந்த வரியில் எழுதினாலும்
அன்பு ஊறிவிடும்

காத்திருந்தேன்

****

9 கருத்துகள்:

  1. ரசித்து எழுதப்பட்ட வரிகளா...?
    ரசிக்க எழுதப்பட்ட வரிகளா...?

    இரண்டும் சரியே!!

    பதிலளிநீக்கு
  2. வருகை தாருங்கள்...!
    வாசித்துப் பாருங்கள்...!
    பங்கு பெறுங்கள்...!!

    என்றும் உங்களுக்காக
    "நந்தலாலா இணைய இதழ்"

    பதிலளிநீக்கு