*
பிரம்மாண்டத் தொழிற்சாலையின்
அபாயச் சங்கின் மீது
கண்ணாடி இழைச் சிறகுகள் படபடக்க
சென்றமர்கிறது
ஒரு
மழைத் தும்பி
வெகு நாட்களாக
அந்தத் தும்பியும் பறக்கவில்லை
சங்கும் ஒலிக்கவில்லை
அதன்
தவம் கலையும் ஒரு நாளின்
வெம்மைப் பகலில்
இந்நகரத்தின் மீது
இரத்த மழைப் பொழியும்
என்றான்
என்
பிரியத்துக்குரிய
தோழன்..!
****
ath tholitsaalai koodangkula anumin aalaiya ilangko? aththumbiyin thavam kalaiyathirukkattum.
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் நுட்பமான பார்வைக்கும் நன்றி..கோநா..!
பதிலளிநீக்கு