சனி, மார்ச் 07, 2009

ஓரப் பார்வையில்..

*

உன்
இதழோரம்..
நெளியும்..புன்னகையில்..
பிறக்கிறது
ஒரு கவிதைக்கான்
முதல் வரி.

நீ..
உள்ளங்கைக்குள்..
அழுத்தி வைத்திருக்கும்
கைக்குட்டைப் பூவுக்கும்
ஒரு வாசனை.. சேர்ந்திருக்கும்.

ஓரப் பார்வையில்..
தையல் போடும்
காட்சிகளை..
மனசுக்குள்..
நூல் பிரிக்கும்
வித்தையை..
யாரிடம் கற்றாய்..?

************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக