சனி, மார்ச் 28, 2009

பேச்சு நின்றதில்லை..

*

நீ
பேசிக் கொண்டேயிருக்கிறாய்
காலங்காலமாய்..

சூரியன்
விழப் போகும்
மேற்கு வெளியில்..
குத்தி நிற்கும்.. உன் பார்வை.

பிடரியில்
அலையும் விரல்..
நிதானமாய் மீண்டு..
மீசை நீவும்..

பேச்சு நின்றதில்லை.

நான்
பார்த்துக் கொண்டே நிற்பேன்.

உன்
உதடுகளிலிருந்து
தப்பும் வார்த்தைகள்..
என்
காதருகே..
மொய்க்கும் தினமும்..

போதும் -

அந்தரத்தில்..
மிதந்தது..

தரையிறங்கி..
என்
வெப்பத்தை..
எனக்கு அறிமுகப்படுத்து..


******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக