சனி, மார்ச் 07, 2009

முற்றுப்புள்ளி

*

ஜன்னலோர
பஸ் பயணத்தில்..
கழுத்து செயினை
பல்லில் கடித்தபடி..
தினம் பயணிக்கிறாய்..

ஒற்றை
ஜடைப் பின்னலில்..
'இரவை' அள்ளி முடிந்திருக்கிறாய்..!

லேசாய்
முனை உடைந்த..
தெற்றுப் பல்லில்
சிறு புன்னகையை..
பூசி வைத்திருக்கிறாய்..

கீழ் இதழின்..
வளைவோரத்தில்..
ஒரு
மச்சப் புள்ளி.

சொல்..
உன்
பெயர்..
'கவிதை' தானே..?

*********


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக