*
நான்
உன்னை...
முத்தமிட மறுத்த..
நிமிடங்களை..
என்ன செய்யப் போகிறாய்..?
கை விரல்கள்..
கோர்த்துக்கொண்டு..
தலை சாய்த்து..
நீ புன்னகைத்த..நொடியில்..
செத்து விட..நினைத்தேன்..
கால்..புதைய
நடந்த..
காலத்தின் நிழலில்..
இளைப்பாறும் நாட்கள்..
நமக்காக..ஏங்கும்.
நீ
எழுதும் கடிதங்களால்..
மூச்சு வாங்கும்
என்
இரவுகளை..
ரகசியப் பேழையில்
அடுக்கி வைத்திருக்கிறேன்.
அதுவரை...
நான்
உன்னை..
முத்தமிட மறுத்த..
நிமிடங்களை.. நீ -
என்ன செய்யப் போகிறாய்..?
***********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக