சனி, மார்ச் 28, 2009

பூங்காவில் செடி வெட்டுபவனின் கத்தரி..

*

'நேரமாகிவிட்டது..
எழுந்து போங்கள்..' - என்று சொன்ன..
பூங்காவின் குரலை..
மென்றுக் கொண்டிருந்த
மனதுக்கு..

கவிதை யெழுத
யத்தனித்த
என்
இரவு முழுதும்..

கத்தரிச் சத்தம்
கேட்டுக் கொண்டேயிருந்தது..

காலையில்..

குப்புறக் கிடந்த
என் முதுகில்..
சூரியன்
கை வைத்தபோது..

என் அறை முழுதும்..
கவிதைகள்..
துண்டுத் துண்டாய்
சிதறிக் கிடந்தன..!


******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக