திங்கள், மார்ச் 30, 2009

ஒரு சாலை விபத்தில்..!

*

எங்கோ
ஒரு சாலை விபத்தில்..
யாரோ
இறந்துப் போனதாய்..

கூட்டத்தின்..
நெரிசல்..
இடைவெளியில்...
ஓடியப் பார்வையில்..

ரத்தச் சிதறலோடு
வானம் பார்த்து..
மல்லாந்திருந்த முகத்தில்..

பால்ய
நண்பனின் அடையாளங்கள்..!


*******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக