சனி, மார்ச் 28, 2009

வார்த்தைப் பரண்கள்..

*

நட்பின் குரலை
தொலைப்பேசியில் அனுப்பினாய்..
பத்திரமாய்
உள்வாங்கியது மனம்.

சேமித்த
நினைவுகள் எல்லாம்..

கணக்கின்றி..
மூட்டைக் கட்டி
வைத்த
மனப் பரணில்..

தூசிப் படராமல்..
வார்த்தைகள் கொண்டு..
போர்த்தி வைத்திருக்கிறேன்..

நீ..
அடுத்த வாரம்
வருவதாக சொன்னாயே..!

அன்று..
அவைகளை..
உதறிப் பார்ப்போம்..

துணைக்கு நீயுமிருந்தால்..
தும்மலாவது மிச்சமாகும்..


*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக