வெள்ளி, மார்ச் 20, 2009

மௌனத்தையும் கொண்டு போய்விட்டான்..

*

வந்து சென்ற நிமிடம் முதல்..
துடியாய்த் துடிக்கிறது - முள்

'காலத்தை' விரித்துத் தானே
தரையில் உட்கார்ந்திருந்தோம்..!

அவன் வந்து சென்ற நிமிடம் முதல்..
துடியாய்த் துடிக்கிறது - ஒலி

வந்துவிடுவதாகச் சொல்லித் தான் போனான்..
மௌனத்தையும் கொண்டு போய்விட்டான்.

சென்றுவிட்ட நிமிடம் முதல்..
துடியாய்த் துடிக்கிறது - காலம்

வந்துவிடுவான் எப்படியும்..
வந்ததும்
மௌனத்தைப் பிடுங்கி
பூட்டி வைக்க வேண்டும்.

********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக