*
காலையில்
அவசரமாய்
அவள்
கிண்டித் தந்த
'நூடுல்சில்'
காதல் இருந்தது..
பஸ் பயண
நெரிசலில்..
கொடுத்தனுப்பிய
காசுக்கு..
கை மாறிய..
டிக்கட்டில்..
எவளோ
ஒருத்தியின்
உள்ளங்கை..வியர்வை
மிச்சம்..இருந்தது..
வாடிக்கையாளரைத்..
தேடிப் போன..
கண்ணாடிக் கட்டிடத்துள்..
வரவேற்பில்
யந்திரமாய் பதிலளித்த..
பெண்ணின்
கண்களில்..
வாசிக்க முடிந்ததொரு..
கனத்த மௌனத்தை..
பூங்காவில்..
நண்பன்.. அறிமுகப்படுத்திய..
அவன் காதலியின்..
கைக் குலுக்கலில்..
உணர முடிந்ததொரு
நம்பிக்கையை..
வீடு
திரும்பும் வழியில்..
பூக்களை
முழமிட்டுத் தந்த
பூக்கார அக்காவின்..
சிரிப்பில்..
வாசிக்க
முடிந்ததொரு காதலை..
வீட்டுக்குள்..நுழைந்ததும்..
ஓடி வந்து..
என் கழுத்து 'டையை'
நளினமாய்க் கழற்றிய..
அவள் விரல்களில்..
நெளிந்தோடியது..
கொஞ்சம் காமம்..!
*******
காதலை காதலால் வடித்திருக்கும் தங்கள் கவிதை அருமை ....
பதிலளிநீக்கு