புதன், மார்ச் 04, 2009

நீள் பாதை..ஒரு கொடும் இரவு..

*

அசைவற்ற நிலவின் வழிக்காட்டுதலில்
அடர் இரவு..அசைந்துக் கொண்டிருக்கிறது..

வீசும் குளிரை
ரகசியமாய் உறிஞ்சி..
ஊளையிடுகின்றன தெரு நாய்கள்.

லேசாய் நடுங்கும் விரல்களுக்குள்
சிகரெட் பதறுகிறது.

முன்னெப்போதும் அனுபவித்திராத
பயமொன்று..இதயத்தை முறுக்குகிறது.

கால்கள் என்பது கால்கள் அல்ல..
மூளைத் தானே..?

வேகமாக நடப்பதா? ஓடுவதா?
முடிவெடுக்கும் சக்தியற்று..
நீள்கிறது பாதை..

பிரசவத்தின் போது..
'உன் மனைவி இறந்து விட்டாள்..' - என்று
செல்போனில்.. குறுஞ்செய்தி.. அனுப்பிய
மடையனை.. என்ன செய்ய..?

இப்போது -
நான்...
வேகமாக நடபபதா? ஓடுவதா?

இரவு
அசைந்துக் கொண்டே இருக்கிறது.

*************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக