*
கட்டிடங்களுக்கிடையே..
பரவும் வெயிலை..
துண்டு துண்டாக..
வெட்டுகிறது..
நிழல்..
சிக்னல் வாகனங்கள்..
கக்கும்..
பெட்ரோல் புகையை
பருகி..
வெப்பமாய்..உருகுகிறது..
வெயில்..
இந்தப்
பெருநகரத்து..
இடிபாடுகளுக்கு ஊடே..
தன் தாகம்..தீர்த்துக்கொள்ள..
திக்கற்று அலையும்..வெயில்..
தேங்கும்..சொற்ப..
சாக்கடை..நீரை..
பரிதாபமாக..உறிஞ்சுகிறது..!
******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக