சனி, மார்ச் 07, 2009

கைப் பிடித்து நடந்த நாட்கள்.!

*

பால்யக் கால
காடுகளை
மனம் இன்னும்
சுமந்து திரிகிறது..

வரப்பில்..
நீ
என் கைப் பிடித்து..
நெருக்கமாய் நடந்த
வெப்பத்தை..
இன்றும்
என் நினைவில்..
பத்திரமாய்
பொதிந்து வைத்திருக்கிறேன்.

கால் நீட்டி
உட்க்கார்ந்திருக்கும்
அந்த
புளியமரத்தின்..
தடித்த வேர்களில்...
நாம்..
பேசி சிரித்த கதைகள்...
செதில்களாய் மிச்சமிருக்கின்றது.

உனக்குத் தெரியாது
தோழி..!

தூக்கனாங் குருவிக்
கூட்டுக்குள்...
ஒளிந்துக் கிடக்கிறது..
உனக்காக..
நான்
தனிமையில்..எழுதிய
மொத்தக் கவிதைகளும்.

**********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக