திங்கள், மார்ச் 30, 2009

தொடர்ந்து கடிதங்கள் எழுது..

*

நாம் கனவுகள் நெய்த இரவுகள்..
ஈரம் காயாமல்..
எங்கோ மிதந்தபடி
இதயத்தின் ஆழத்தில் இன்னும்..

பேசிப் பகிர்ந்த
வார்த்தைகள் எல்லாம்..
வாழ்வின்
விரல்களுக்கிடையில் சிக்கி..

ஆளுக்கொரு திசையில்..
கசங்கி விட்டோம்..

எழுதிக் குவிக்கும்..
கடிதங்களில்..
நாம் தேடித் தவிக்கும்..
அடையாளங்கள்..

கால வெள்ளத்தின் கரைகளில்..
நொறுங்கிய சருகின் குப்பையாக..

இன்றும்
நாம் தொலைந்துக் கொண்டே..

பகிர்தலுக்கான..
பாதைகள் தோறும்..
உதிர்ந்த பார்வைகள்
சிறு மணலென..

பாத ரேகைகளில்
உருள்கின்றன..

பரவாயில்லை..

தொடர்ந்து கடிதங்கள் எழுது..!

*******

1 கருத்து:

  1. கால வெள்ளத்தின் கரைகளில்..
    நொறுங்கிய சருகின் குப்பையாக..

    இன்றும்
    நாம் தொலைந்துக் கொண்டே..


    மிகவும் பாதித்த வரிகள் இவை

    பதிலளிநீக்கு