*
ரயிலற்ற..
தண்டவாளங்களுக்கிடையே..
மீந்துக் கிடக்கும்
குப்பைகள் நடுவே..
இருக்கக் கூடும்..
ஒரு
கசங்கிய
காதல் கடிதமும்..
கொஞ்சம்..
கண்ணீர்த் துளியும்..
பாதங்களில்..
தவறுதலாய்..
நசுங்கிய..
ரோஜா இதழ்களில்..
மௌனமாய்..
செத்திருக்கலாம்..
ஒரு முத்தம்..
நிமிர்ந்து பார்க்க
ஆசைப்படும்..
வானத்துக்குக் குறுக்கே
கட்டி வைத்திருக்கிறார்கள்..
மின் கம்பிகளை..
' பத்தாயிரம் வோல்டேஜ் '
என்கிறது
அறிவிப்புப் பலகை..
நீ
விபரம் தெரிந்தே..
உன்
புன்னகையை..
அதில்
காயப் போட்டுச்
சென்றிருக்கிறாய்...
ஈரமாய்..
சொட்டிக் கொண்டிருக்கிறது..
கண்ணீர்த் துளி..!
**********
சில கவிதைகள் பாராட்ட நினைப்பவரின் வார்த்தைகளைத் திருடிச் சென்றுவிடக் கூடும் :))))
பதிலளிநீக்கு