திங்கள், மார்ச் 30, 2009

கண்ணாடி ரசவாதம்..!

*

கண்ணாடியில்
முகம் பார்த்த
கணத்தில்..
ரசம் வழிந்தது..

காலப் பெருவெள்ளத்தின்..
இருள் சூழ்
நிழலொன்று..

கண்ணுக்குக் கீழே
தொங்கியது..
கரு வளையமாய்..

மன வெளியின்
நிலப் பரப்பை
அளக்கத் துடித்த
பார்வையை..

மோதிக் குடித்தது
கண்ணாடிக் குழம்பு..

சட்டகத்துள்
சிறைப்பட்ட
முகத்தின்
சுருக்கங்களில்..

வழிந்தபடியே..
இருக்கிறது..

பூசிப் பெயர்ந்த
கண்ணாடி..
ரசமொன்று.

*****

1 கருத்து:

  1. காலப் பெருவெள்ளத்தின்..
    இருள் சூழ்
    நிழலொன்று..

    கண்ணுக்குக் கீழே
    தொங்கியது..
    கரு வளையமாய்..


    அருமை அருமை

    பதிலளிநீக்கு