சனி, மார்ச் 28, 2009

வளையலின் இசை..!

*

அவசரமாய்
இட்ட.. பின்னலில்..
முறுக்கி முடிச்சிட்ட..
பச்சை ரிப்பனை..

'அவன்.. பட்டாம்பூச்சியென்பான்...'

எழுதி முடித்த
கவிதைக்கு
வைக்கும்..
முற்றுப்புள்ளிப் போல்
இருக்க வேண்டுமாம்..

'பொட்டு.'

'இன்னும் கொஞ்சம்..
வளையுமென்றால்..
உன்
புன்னகையில்
ஊஞ்சலாடலாம்..' -

என்றான்..ஒரு முறை.

முதன் முதல்
பஸ்சில் இனைந்து..
பயணித்தப் போது..
கண்ணாடி வளையல்..
பரிசளித்தான்..

'என் வெட்கத்திற்கு
அது.. இசைக் கூட்டுமாம்..'

இதோ..
வேகமாக..
வாசல் கடந்து..
அம்மாவுக்கு..
'டாட்டா'
சொல்லி..
தெருவில்..கால் பதிய..

சட்டென்று கடந்தது
அவன்.. சைக்கிள்..!

தெரு வளைவில்..
காத்திருப்பான்..

'இன்றைக்கு
என்ன சொல்லுவான்..?'

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக