*
அவரவர் அமையப் பெற்றிருக்கிறார்கள்..
அவர்களுக்கான்
சிறு சிறு காதல்களும்
சிற்பல ஊடல்களும்..
நம்பும்படியான
சொற்களுடன்
திரிகிறார்கள்..
கேட்கும்.. காதுகளற்று..
இதயத்தின்
உச்சியிலிருந்து..
குதித்து விடுவதாக..
பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது..
காதல்..!
ஒரு முனையில்
உற்பத்தியாகும் புன்னகை...
இதழின்..
மறு கோடியில்..
உருகி வழிகிறது..
உரசும் ஸ்பரிசத்தின்
வெப்பத்தில்..
முத்தங்கள்
கொதிக்கின்றன..
அனலை
அணைக்கும் வழியற்று..
இமை கவிழும்
கண்களுக்குள்..
ரகசியமாய் அரங்கேறுகிறது..
ஒருஇந்திர விழா..!
******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக