திங்கள், மார்ச் 30, 2009

முதல் வாசகன்..!

*

ஜன்னல் திட்டின்
தண்ணீர் பாட்டிலை
ஊடுருவும்
வெயிலொன்று
அலையலையாய்..

என்...
கவிதைத் தாளின்..
படிமங்களாய்..

தலைப்பில்
உட்கார்ந்து..

உதடு குவித்து..

எழுதும்
பேனாவின்..
முனையிலேயே..
உறிஞ்சுகிறது..
வார்த்தைகளை..!

*******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக