சனி, மார்ச் 14, 2009

என்ன செய்ய..?

*
கதவடைத்துக் கொண்ட
கனவுகளுக்குள்..
காதலி தனியே..நிற்கிறாள்..

அது..
வண்ணங்கள் இல்லாத
பெருங்காடு..

நிலவை
விழுங்கும்..
ராட்சச நிழல்களோடு..
என்ன செய்வாள்..?

மீண்டும்
கனவுக்குள்..நுழைந்து விட
போராடும்..
என் இரவு.....

*******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக