சனி, மார்ச் 28, 2009

என் தனிமைக் கதவு..

*

காற்றின்
நுண்ணிய ஈரத் துளியெங்கும்
கலந்திருக்கக் கூடும்
சரித்திரம் மறைத்த
மனித ஓலம்..

போர்க்களத்தின்
ரத்தத் துளிகள்
உறிஞ்சும் மண்
இன்று
கலயமாகிறது..

குடிக்கும் நீர்
தொண்டைக்குழியில்..
புதைகிறது.

முனகும் இரவுகளின்
நாவில்..
இருட்டு..
ஒரு எச்சிலைப் போல்
ஊறுகிறது.

என்
தனிமைக் கதவின் மீது
ஒட்டப்படுகிறது..
உன்
மரணம் குறித்த அறிவிப்பு..

மனக் கிணற்றின்
ஆழத்தில் அமிழ்கிறது..
விடுபடுதலுக்கான
'சாவி' ஒன்று..!

*******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக