*
விழியும் விழியும்
போட்டத் தையலில்..
காதல்
சிக்கிக் கொண்டது..
*
என்
கண்ணீரில் மூழ்காதக்
காகிதக் கப்பலில்..
மிதக்கின்றன
உன் கவிதைகள்..
*
அதென்ன..?
சந்தனத்தில்..
ஒரு சொட்டு..
' தீ '
விழுந்தது போல்
அத்தனை அழகாய்..
ஒரு
மூக்குத்தி..
உன் முகத்தில்..!
*
வெட்கத்தில்..
மண் கீறும்..
கால் விரலுக்குக் கீழ்..
காதலின் ஈரம்..
*
என்
கனவுகளுக்கு
வர்ணம்
தீட்டும்பொழுதெல்லாம்..
உன்
இதழ்களின்
சிவப்பில் தான்
தடுக்கி விழுகிறேன்..
*
இந்த
கடற்கரை மணலில்..
உன்
விரல்கள்..
எதைத் தேடுகின்றன..?
நேற்று..
எழுதிய
என் பெயரையா..!
*
குளத்தில்..
மிதந்தபடி..முனுமுனுக்கும்
நிலவைப் பற்றி..
கவலை இல்லை..
உன்
கூந்தலில்..
உட்கார்ந்தபடி..
ஒட்டுக் கேட்கும்..
இந்த ரோஜாவைத் தான்
என்ன செய்ய..?
*************
வெட்கத்தில்..
பதிலளிநீக்குமண் கீறும்..
கால் விரலுக்குக் கீழ்..
காதலின் ஈரம்..
குளத்தில்..
மிதந்தபடி..முனுமுனுக்கும்
நிலவைப் பற்றி..
கவலை இல்லை..
உன்
கூந்தலில்..
உட்கார்ந்தபடி..
ஒட்டுக் கேட்கும்..
இந்த ரோஜாவைத் தான்
என்ன செய்ய..?
அழகு