*
முடிந்த இரவின்..
முகத்தில் தொடங்கி..
முகத்தில் அறையும்
வெயில் பகல் தொடர்ந்து..
எத்தனை
முகங்கள்..
இந்த வழி நெடுக..?
ஒவ்வொரு விழியிலும்
ஒவ்வொருத் தேடல்..
எல்லாப் புன்னகையிலும்..
எங்கோ
கொஞ்சம் வெப்பம்..
நிஜங்களை..
போர்த்தி உறங்கும்
நிழல்கள்..
முடுக்கி விட்ட
வேலைகளின்..
யந்திர
ஓட்டங்களுக்கு நடுவே..
இப்படி..
கணப் பொழுதாவது
கம்ப்யூட்டர்
வழியே..வந்து...
என்
பாலைவனத்தில்..
மழையாய்..
பெய்கிறாய்..
நீ...!
******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக