*
இதோ
இப்பொது வந்து விடுவான்..
இதழ் நிறைய
புன்னகை ஏந்தி...
முத்தங்களை..
கண்களில் தாங்கி..
என்
தனிமைப் பொழுதுகளின்..
அதிசயக்காரன்..
நிழலாய்
பதுங்கியிருந்து..
என் ஜன்னலின் வழியே..
நுழைந்து..
என் இரவுகளை..
நிரப்புபவன்..
பேசும்
நிமிடங்களை..
மணியாய் கோர்த்து...
என் கழுத்தில் சூடி..
போய்விடுவான்..
அதை
விரல்களினூடே..
நெருடி..நெருடி..
அவனுக்காகக் காத்திருப்பேன்..
இதோ
இப்போது வந்து விடுவான்.
***********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக