*
ஆதாம்..கடித்த..
ஆப்பிளுக்குள்..
புதைந்துக் கிடந்த..
'விதைகளை' -
இன்று வரை..
மென்றுக் கொண்டிருக்கிறோம்
'காதல்' என்ற பெயரில்..!
ஏவாளின்...
கூந்தலுக்குள்...
காதல் இரவின்..
ஊற்றொன்று..
காலங்காலமாக...
சுழித்தோடுகிறது.. இலக்கின்றி..!
மொழியற்ற
இதழ்களின்..
மௌனத்தில்...
முத்தங்களை...
மொழிப்பெயர்த்துக் கொண்டது காதல்..!
புலரும்..அந்தியில்..
யுகங்களின்..அலைகளில்..
உருளும்..
காதல் மணல்கள்..!
********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக