சனி, மார்ச் 07, 2009

எழுதாத இரவுகள்

*

ஒரு
சின்ன சொல்லுக்குள்
உடைந்துக் கிடக்கிறது..
உன்னிடம்
சொல்லத் தயங்கும் காதல்.

உதட்டு ரேகைகளில்
வறண்டுத் தவிக்கின்றன..
ஒவ்வொரு எழுத்தும்..

நீயோ
ஏதேதோ பேசிக்கொண்டிருக்க..
என் கண்கள்
மட்டுமே..
அதைக் கவனிக்கின்றன..

காற்றில்..
அபிநயம் பிடிக்கும்
உன்
கை விரல்களுக்கு..
மகுடம் சூட்ட..
என்
கவிதை இரவுகள் காத்திருக்கின்றன.

இப்படி..
சொல்லத் தயங்கிய
தருணங்கள்..எல்லாம்..
என்
அறையின் தனிமையில்..
மௌனமாய் உட்கார்ந்து..
என்னை முறைக்கின்றன..

எழுதாத இரவுகள்..
இன்னும் காத்திருக்கின்றன..

**********

1 கருத்து:

  1. அருமை.. குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. அனைத்து வரிகளும் அழகு

    பதிலளிநீக்கு