*
என்
கோடைக் கால
விடுமுறைகள்..
கிராமத்து..வீட்டின்..
முற்றத்து..
தாழ்வாரத்தில்..
உன்
நினைவுகளுடன்..
இளைப்பாறுகின்றன..
புங்கை மர
நிழல்கள்..
மாலைப் பொழுதுகளை..
என் மீது..
வாரி இறைக்கின்றன..
நீயோ
வெகுத் தொலைவில்..
உன்
பகல்களை...
விரட்டிக் கொண்டிருக்கிறாய்..
இரவு
மட்டுமே..
என் வெப்பத்தை..
நிலவின் முகத்தில்..
எழுதி விடுகிறது..
நான்..
உனக்காக..
நீ இல்லாத..
இந்த இரவில்..
வேறு என்ன செய்து விட முடியும்..?
**********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக