சனி, மார்ச் 14, 2009

எல்லை கடந்ததும்..

*
முடிவற்று நீளும்
பாதைகள்.. தோறும்..
வெயில் காய்கிறது..
நடந்து போவோரின்.. கதைகளோடு..

சாலையோர..
கிலோமீட்டர் கல்லுக்கு கீழே..
ஒதுங்கும்.. நிழலில்..
வாழ்வின்.. எச்சம்..
வக்கற்று இளைப்பாறுகிறது..

காலங்காலமாய்
அசையும் ' வாய்களில்..'
கடைவாய்ப் பல்லில்..
சிக்கிக் கொள்ளும்
சில கதைகள்.

அள்ளி முடிந்த கொண்டையிலும்..
முண்டாத் தட்டிய புஜங்களிலும்..
' வம்பும்..சண்டையும்..'
வண்டி மாட்டின்..
வால் முனையாய் வளர்ந்திருக்கும்..

ஊர்
எல்லையில்..
சுடுகாட்டைக் கடந்ததும்..

முடிவற்று... நீளும்...
பாதைகள்..தோறும்..
வெயில் காய்கிறது..
நடந்து போவோரின்.. கதைகளோடு..!

*******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக